ஹதிஸ்

sahih muslim tamil pdf
View more ebooks on ebookbrowse.com
நபி ஸல் அவர்களின்  கடைசி  நாட்கள் 

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!


மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
“அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்’. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்   ‘நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
‘அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
‘நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
“இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.” (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!  
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
“நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  “உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
“காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார்.  அப்போது  நபி (ஸல்) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
“பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், “அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!” என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!

‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
“அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்’. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்   ‘நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
‘அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
‘நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
“இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.” (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!  
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
“நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  “உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
“காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார்.  அப்போது  நபி (ஸல்) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
“பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், “அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!” என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!

‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
“அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்’. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்   ‘நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
‘அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
‘நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
“இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.” (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!  
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
“நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  “உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
“காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார்.  அப்போது  நபி (ஸல்) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
“பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், “அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!” என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!

‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக’ அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   நூல்: முஅத்தா


முஃமின் எப்படி இருக்கமாட்டான்?

"ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
ஆதாரம் : திர்மிதீ


நற்குணமுள்ளவரே விருப்பமானவர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

நூல்: புகாரி 375



மரணப்பட்ட ஆன்மாக்கள் நாம் கேட்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

கேள்வி:

Mohamed Ismail 

மரணப்பட்ட ஆன்மாக்கள் கேள்வி கணக்கின் பிறகு நல்ல ஆத்மாவாக இருப்பின் மணமகன் மணவறையில் உறங்குவது போல உறங்கிக்கொண்டும் தீய ஆத்மாவாக இருப்பின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதாக ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது. இப்படி மரணப்பட்ட ஆத்மா தன்னிலை உணராது இருக்கும் பட்சத்தில் நாம் கேட்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

Ahlussunnah Val Jama'ah

மணமகன் மணவறையில் உறங்குவது போல உறங்குகிறார் என்றால் ஆழ்ந்த உறக்கம் என்று பொருளல்ல மாறாக உலகியல் இன்பங்களில் மிகுந்த இன்பம் மணவறை இன்பம்தான். எனவே அந்த அளவுக்கு இன்பங்களில் இருப்பான் என்றுதான் பொருள்.
தூங்குவதற்க்கு கூட உயிர் வேண்டும். உயிருடன் உடலுக்கு ஒர் தொடர்பை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
அல்லாஹ் நாடிய அடியாருக்கு அவன் மரணத்திற்க்கு பின்னாலும் பல ஆற்றல்கள் வழங்குகிறான்.


164 - (2375) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَسُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَتَيْتُ - وَفِي رِوَايَةِ هَدَّابٍ: مَرَرْتُ - عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ "

முஸ்லிம்-2375

6391- حَدَّثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ المُفَضَّل الحراني، حَدَّثنا الحسن بن قتيبة المدائني، حَدَّثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الأَنْبِيَاءُ أَحْيَاءٌ يُصَلُّونَ فِي قُبُورِهِمْ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ أَحَدًا تَابَعَ الْحَسَنَ بْنَ قُتَيْبَةَ عَلَى رِوَايَتِهِ عَنْ حَمَّادٍ وَإِنَّمَا يُرْوَى، عَن أَنَس مِنْ حَدِيثِ ثَابِتٍ وَغَيْرِهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رأيت موسي يُصَلِّي فِي قَبْرِهِ.

முஸ்நதுல் பஸ்ஸார்-6391

ரஸூல் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் மூஸா அலை அவர்கள் கப்ரில் தொழுது கொன்டிருப்பதை நான் பார்த்தேன்.
முஸ்லிம்-2375 முஸ்நதுல் பஸ்ஸார்-6391
இறந்த மூஸா அலை அவர்களின் பேருதவியின் காரணமாகத்தான் நாம் ஐந்து நேர தொழுகை தொழுகிறோம்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ، حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ: مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، قُلْتُ: وَضَعَ شَطْرَهَا، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ، فَقَالَ: هِيَ خَمْسٌ، وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ بِي، حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ المُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ؟ ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا المِسْكُ "
__________

புஹாரி -349 

ஆதம், மூஸா இருவரின் தர்க்கம் புஹாரி -3409 பல இடங்கள் பார்க்கலாம்
எனவே மரணம் ஏற்படுவதால் அத்மாவின் சக்கதிகள் அழிந்துவிடுவதில்லை. உடல்களாய் செய்யும் செயல்கள் மட்டும் நிலைத்துவிடும். நபிமார்கள் நல்லடியாகளின் அர்ப்புதங்கள் உடல் சமபந்தப்பட்டதல்ல உயிர் ஆத்மா சமபந்தப்பட்டது. எனவே வாழும் காலத்திலும் மரணத்திற்க்கு பின்னாலும் ஆத்மா ஆற்றல் அழிவதில்லை.



இஸ்லாத்திற்க்காக ஆர்பாட்டம், பெண்களா?

இஸ்லாத்திற்க்காக ஆர்பாட்டம், போராட்டம், மறியல். இஸ்லாமியர்களுக்காக சாலையோரத்தில் குரல் கொடுக்கும் இவர்கள்தான் உன்மையான இஸ்லாமியப் பெண்களா? இறைவழிபாட்டிற்காக இறைஇல்லத்திற்க்கு வருகைதரும் பெண்களா? மேடை ஏறி இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பெண்களா? தெலைக்காட்சியில் ஓய்வின்றி பிரசங்கம் செய்யும் பெண்களா? அல்லது இஸ்லாமியப் பெண்களுக்காக உரிமைகுரல் எழுப்பும் தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களா? யார்தான் உண்மையான இஸ்லாமியப் பெண்கள். குர்ஆன் ஹதீஸை அலசுவோமா? வாருங்கள். 
குர்ஆன் கூறுகிறது......... 

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33:33)

( நபியின் மனைவியரே!) உங்களுடைய வீடுகளிலேயே நீங்கள் தங்கியிருங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் சுற்றியது போல் நீங்கள் வெளியில் சுற்றாதீர்கள். தொழுகையைக் கடைபிடியுங்கள் ஜகாத்தைக் கொடுங்கள். அல்லாஹுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் )பாவ( அசுத்ததை அவன் போக்குவதற்க்கவும், உங்களை முற்றிலும் அவன் பரிசுத்தமாக்குவதற்க்கவும். (33:33)
மேர்கூறப்பட்ட இந்த வசனத்தில் அல்லாஹ் உண்மையான இஸ்லாமியப் பெண்களின் முக்கியமான மூன்று தன்மையைப் பற்றி கூறுகிறான். 

அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பார்கள், 
தொழுகையை நிறைவேற்றுவார்கள், 
அல்லாஹுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள், 

மேற்கூறப்பட்ட வசனத்தின் விரிவுரையில் தப்ஸீர் குர்துபியில்............

قَالَ ابْنُ عَطِيَّةَ: بُكَاءُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِنَّمَا كَانَ بِسَبَبِ سَفَرِهَا أَيَّامَ الْجَمَلِ، وَحِينَئِذٍ قَالَ لَهَا عَمَّارٌ: إِنَّ اللَّهَ 

قَدْ أَمَرَكِ أَنْ تَقِرِّي فِي بَيْتِكِ. تفسيرالقرطبي

ஜமல் போரின் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டைவிட்டும் வெளியேறிய போது அம்மார் (ரலி) அவர்கள் ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை உங்ளுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள் என்று ஏவியிருக்கிறான்’ என்றார்கள். இதன் காரணமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரே ஒருதடவை நிற்பந்த சூழ்நிலையில் வீட்டை விட்டும் வெளியேறியதற்க்கு காலமெல்லாம் கண்கலங்கினார்கள் என்றால் இன்றைய இஸ்லாமியப் பெண்கள் காலமெல்லாம் சுற்றித்திரிந்தும் ஒருமுறை கூட கண் கலங்கினார்களா? இல்லை. மாறாக ஆற்பாட்டம், போராட்டம், மறியல், போன்ற மார்க்கம் தடைசெய்த செயல்களுக்காக அன்னிய ஆண்களுடன் ஆனந்தமாக அலைகின்றார்கள். இதன் மூலமாக இறை கட்டளைக்கு மாறு செய்கிறோம் என்பதை இன்றைய இஸ்லாமியப் நாகரீக பெண்கள் உணர்ந்துகொள்வார்களா?


மரணப்பட்டவர்களிடம் நமக்காக துவா கேளுங்கள் எனக்கேட்பதோ ஆகுமா?

கேள்வி:

Mohammed Ismail
மையத்து மற்றும் மரணப்பட்டவர்களுக்காக
துவா கேட்பதோ அல்லது மரணப்பட்டவர்களிடம்
நமக்காக துவா கேளுங்கள்
எனக்கேட்பதோ ஆகுமா?

பதில்.......

Ahlussunnah Val Jama'ah

முதல் கேள்வி மரணப்பட்டவர்களுக்காக
துவா கேட்பதை பற்றியது.

بَابُ مَا يَلْحَقُ الْإِنْسَانَ مِنَ الثَّوَابِ بَعْدَ وَفَاتِهِ

மரணத்திற்க்கு பின்பு நன்மைகள் மனிதனுக்கு சேர்த்து வைப்பதின் பாடம்.

இந்த பாடத்தில் இமாம் முஸ்லிம் ரஹி அவர்கள் தன்னுடைய ஸஹீஹ் முஸ்லிமில் கொண்டுவரும் ஒரு ஹதீஸ்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ "

ஒருவன் மரணித்தால் அவன் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டுவிடும் முன்று அமல்களை தவிர 

1, நிலையான தர்மங்கள்,
2, பயனளிக்கப்பட்ட கல்வி,
3, அவருக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளைகள்,

முஸ்லிம்-1631

எனவே மரணித்தவர்களுக்காக துஆ செய்யலாம். இது போன்ற ஆதாரங்கள் ஏராளம் உள்ளன.

இரண்டாவது கேள்வி மரணப்பட்டவர்களிடம்
நமக்காக துவா கேளுங்கள்
எனக்கேட்பது ஆகுமா?

உயிருடண் இருக்கும் ஒருவரிடத்தில் நாம் துஆ கேட்க்க கூறுகிறோம் அவர் நமக்காக துஆ கேட்க்கிறார். ஏன் என்றால் அவர் உயிருடன் இருக்கிறார். நபிமார்கள், ஷூஹதாக்கள் மண்ணறையில் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.எனவே நபிமார்கள், ஷூஹதாக்கள் போன்றவர்களிடம் நமக்காக துவா கேளுங்கள் எனக்கேட்பது கூடும். 

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ 3-169

அல்லாவின் பாதையில் கொலை செய்யப்பட்டவர்கள் மரணித்தவர் என்று எண்ணாதீர்கள். அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லஹ்விடத்தில் உணவுகள் வழங்கப்படுகிறது.

மரணித்த ஒருவரிடம் நாம் நமக்காக துஆ செய்யுங்கள் என்று கூறினால் அவர் நமக்காக துஆ செய்வாரா இல்லையா என்பதை நாம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பார்க்கும் போது அந்த ஆற்றலை அல்லாஹ் அவன் நாடியவருக்கு வழங்கி இருக்கிறான்.

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا 
4-64

அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்து உங்களிடம் வருகை தந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி ரசூலும் அவர்களுக்க பிழை பொறுப்பு தேடினால் நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக கருணையாளனாக அடைந்து கொள்வார்கள். 4 - 64

பாவம் செய்தவர் நாயகத்தை அணுகுவதற்க்கு அல்லாஹ் கூறுகிறான் இந்நிலை வழும் காலத்தில் மட்டுமல்ல மரணித்த பின்னாலும்தான் என்று அதிகமான விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள் குறிப்பாக இப்னு கஸீர் ரஹ் அர்கள் கூறுகிறார்.

وَقَدْ ذَكَرَ جَمَاعَةٌ مِنْهُمْ: الشَّيْخُ أَبُو نَصْرِ بْنُ الصَّبَّاغِ فِي كِتَابِهِ "الشَّامِلِ" الْحِكَايَةَ الْمَشْهُورَةَ عَنْ العُتْبي،قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُ اللَّهَ يقول: {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} وَقَدْ جِئْتُكَ مُسْتَغْفِرًا لِذَنْبِي مُسْتَشْفِعًا بِكَ إِلَى رَبِّي ثُمَّ أَنْشَأَ يَقُولُ:
يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ (1) أعظُمُه ... فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ ...
نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه ... فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ ...
ثُمَّ انْصَرَفَ الْأَعْرَابِيُّ فَغَلَبَتْنِي عَيْنِي، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ فَقَالَ: يَا عُتْبى، الحقْ الْأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللَّهَ قَدْ غَفَرَ له (2) .

ஒருமனிதர் ரஸூல் ஸல் அவர்களுடைய கப்றுக்கு வந்து மேல் குறிப்பிட்ட ஆயத்தை ஓதி எனது பாவம் மன்னிப்பதற்க்காக அல்லஹ்விடத்தில் பரிந்துரை செய்ய உங்களிடம் கேட்கிறோன் என்று சென்ன நிகழ்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இப்னுகஸீரில் உள்ள செய்தியாகும். நாமாகஎதுவும் சொல்வது இல்லை.

எனவே மரணித்த நாயகத்திடம் துஆ கேட்பதற்க்காக சொல்வது தவரில்லை. 
மறுப்புகள் எழுதுபவர் ஆதாரமாக எழுதவும்.





கத்தம் பாத்தியா கூடுமா?

கேள்வி......

Mohamed Ismail 

கத்தம் பாத்தியா கூடுமா?

பதில்.......

Ahlussunnah Val Jama'ah

கத்தம் ) ختم ( என்றால் முடித்தல் என்று பொருள்.
புழக்கத்தில் குர்ஆனை ஓதி முடிப்பதற்க்கு கத்தம் என்று சொல்லுவார்கள்.

பாத்திஹா என்றால் அனைவருக்கும் தெரியும்.

கத்தம் பாத்தியா கூடுமா? என்றால் ஒதுவது கூடும்.

உங்களுடைய கேள்வி......?

மரணவீட்டில் கத்தம் பாத்தியா ஓதுவது கூடுமா?

என்றால் அதுவும் கூடும் சாதாரணமாக கத்தம் பாத்தியா ஓதுவது கூடும் என்றால் மரணவீட்டில் ஓதுவதும் கூடும்.அப்படி யாராவது மரணவீட்டில் ஓதுவது கூடாது என்று சொன்னால் அதற்கான ஆதாரம் அவர்கள் காட்ட வேண்டும்.

குர்ஆன் எங்கு ஓதப்படுகிறதோ அங்கு அல்லாவின் அருள் இறங்கும்.
ஷைய்தான் அந்த வீட்டின் பக்கம் வரமாட்டான்.
அல்லாவின் அருள் மற்றும் ஷைய்தானின் வேளியேற்றம் தேவையைன்றால் வீட்டில் ஓதுங்கள் அது மரணவீடாக இருந்தாலும் சரி, மாமியார் வீடாக இருந்தாலும் சரி தேவையைன்றால் ஓதுங்கள் தேவையில்லை என்றால் விட்டுவிடுங்கள். தேவையுடையவர்களை தடுக்காதீர்கள்

2877 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ



கப்ரு ஜியாரத் தெளிவான விளக்கங்கள்

முறையான கப்ரு ஜியாரத் பற்றி தெளிவான 1000 விளக்கங்கள் உள்ளன. அதைதான் நாங்கள் பின் பற்றுகிறோம். கப்றுகளை யாரும் வணங்குவதில்லை. 1400 ஆண்டுகளாக இருந்த நடைமுறைகள் தான். சுன்னத் ஜமாத்தினர் கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். இதோ வஹ்ஹாபிச மதகுருஇப்னு தைமிய்யாவின் புத்தகத்திலிருந்து........
இப்னு தைமிய்யா எழுதுகிறார்: 'நபிமார்கள், ஸாலிஹானவர்களின் கப்ருகளுக்கருகில் பிரகாசம் ஏற்படுதல், மலக்குகள் வருகை தருதல், ஷெய்த்தான்கள் அவற்றுக்கருகில் செல்ல முடியாமை, தீ விபத்து மற்றும் ஆபத்துக்களிலிருந்து கப்ரும், சுற்றுப்புறங்களும் பாதுகாப்புப் பெறுதல், தங்களுக்கருகே அடக்கம் செய்யப்படுவர்களுக்காக அவர்கள் சிபாரிசு செய்தல், கப்ருகளுக்கு வருபவர்களுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைத்தல், கப்ருகளை திட்டுபவர்களுக்கு ஆபத்துக்களும், தண்டனைகளும் ஏற்படுத் முதலிய கராமத்துகளும், அசாதாரண நிகழ்ச்சிகளும் உண்மைகளே! நான் அவற்றை எதிர்க்கவில்லை. நபிமார்கள், நல்லவர்களின் கப்ருகளில் நிகழும் அசாதாரண சம்பவங்களும், ரஹ்மத்தும் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் மதிப்புகள் நம் சிந்தனைக்கு எட்டாதவை.
(இக்திளாஉ பக்கம் 374).
இது மட்டுமல்ல. எத்தனையோ அற்புதங்கள் அங்கு ஏற்படுகின்றன.இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்
அல் குர்ஆன் [2:154]
இத்தகைய சிறப்பு மிக்கவர்களின் தர்காவிற்கு போக உஙளுக்கு நசீபு இல்லை. வழிகெட்ட கொள்கைகளை விட்டு சரியான மார்க்கத்திற்கு வாருங்கள். வஹ்ஹாபிசம் இஸ்லாத்திற்கு எதிரானது. அது இஸ்லாமே அல்ல. அதையும் மீறி கப்ரு வணங்கி, கப்ரு முட்டி என்று சொன்னால் அது உங்களைப்பிடித்த சாபம். உங்கள் கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் வெகு தூரம். அந்த அன்பியாக்களும் அவ்லியாக்களும் உங்களுக்கு நேர்வழி காட்ட துஆ செய்கிறோம்.


சிறுவர்களிடத்தில் அன்பு செலுத்திய அண்ணலார்


வீதியில் செல்லும் போது சிறுவர்களை கண்டால் நபி (ஸல்) அவர்கள் தான் முதலில் ஸலாம் சொல்லுவார்கள்.
- (ஸஹீஹ் புகாரீ 6247)
இன்ஷா அல்லாஹ் நாமும் சிறியவர் , பெரியவர் என்று பாராமல் அனைவரிடமும் ஸலாம் கூறுவோம்


அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல். ..!

அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல்.
..!

அறிந்து கொள்...!

திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும்..!
ஷைத்தானை வருத்தமாக்கும்....!

மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும்.
அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.

என் உடப்பிறந்தானே.. .!
அறிந்துகொள்.... !

அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.

திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.

ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.

எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.

திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.
அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும்.
அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.

திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன.
சிலதை எழுதுகிறேன்:-

يَآ اَيُّهَا الَّذِيْنَ ا ٰ مَنُوْا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِرًا وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஈமான் கொண்டவர்களே..! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.

وَالذّ ٰ اكِرِيْنَ اللهَ كَثِيْرًا وَالذَّاكِرَاتِ اَعَدَّاللهُ لَهُمْ مَغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.

فَاذْكُرُوْنِيْ اَذْكُرُكُمْ

என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களைதிக்ரு செய்கிறேன்.

اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَخَرَجَ عَل ٰ ى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَل ٰ ى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذ ٰ لِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذ ٰ لِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَل ٰ كِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَال ٰ ى يُبَاهِيْ بِكُمُ الْمَل ٰ ئِكَةَ اَخْرَجَهُ مُسْلِمٌ وَالتّرْمَذيْ .

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனகேட்டார்கள். சஹாபாக்கள்,அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனகேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள்இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.

عَنْ اَبِيْ سَعِيْدِاخُدْرِيْ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّىَ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ اَيُّ الْعِبَادِ اَفْضَلُ وَاَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيٰمَةِ قَالَ اَلذَّاكِرُوْنَ اللهَ كَثِيْرًا قِيْلَ يَارَسُوْلَ اللهِ وَمِنَ الْغَارِيْ فِيْسَبِيْلِ اللهِ قَالَ لَوْضَرَبَ بِسَيْفِه حَتّٰى يَنْكَسِرَ وَيَتَخَضَّبَ دَمًا فَاِنَّ ذَاكِرَاللهِ اَفْضَلُ مِنْهُ دَرَجَةً اَخْرَجَهُ التِّرْمَذِيْ .

அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:
அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.
அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.
வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ قَالَ يَقُوْلُ اللهُ تَعَالٰى اَنَاعِنْدَظَنِّ عَبْدِيْ بِيْ وَاَنَامَعَهُ فَاِنْ ذَكَرَنِيْ فِيْ نَفْسِه ذَكَرْتُهُ فِيْ نَفْسِيْ وَاِنْ ذَكَرَنِيْ فِيْ مَلَأٍ ذَكَرْتُهُ فِيْ مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا وَاِنْ تَقَرَّبَ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا وَاِنْ اَتَانِيْ يَمْشِيْ اَتَيْنُهُ هَرْوَلَةً اَخْرَجَهُ الْبُخَارِيْ وَمُسْلٍمٌ وَالتِّرْمَذِيْ

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-

'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.

அறிந்து கொள்!

திக்ருடைய மஜ்லிஸாகிறது, அல்லாஹு தஆலாவுடைய மஜ்லிஸும் மலாயிக்கத்துகள், நபிமார்கள், அவ்லியாக்களுடைய மஜ்லிஸுமாகயிருக்கும்.

ஆகையினால் அவர்களுக்கு முன்னால் எப்படி இருக்க வேண்டுமென்பதை மனதில் கவனித்து அச்சத்தோடு ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒழுக்கங்கெட்டவனை சமூகத்தைவிட்டும் மிருகங்கட்டுமிடத்திற்கு துரத்தப்படும்.

ஆகையினால் கல்பு ஹுழுறுடனும் உள்ளச்சத்துடனும் ஒழுக்கமாகவும் திக்ரு செய்ய வேண்டும். திக்ரு செய்ய முன்னால் தவ்பா செய்ய வேண்டும்.

ஆகையினால் திக்ரு செய்கிறவர்கள் செய்த பாவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

நீ அந்த அல்லாஹ் வை எந்நேரமும் கண்டவனைப் போல அவனைப் பயந்துகொள்...!
நீ காணாத போதும் ...அவன் உன்னைக் கண்டு கொண்டே இருக்கின்றான்.. ..!

சிந்திப்பவனே... !
(ஹஷ்யத்) ''இறை அச்சம்'' என்றால் என்ன தெரியுமா...???

அறிந்துகொள்...!
நீ அந்த ''ஹக் தஆலா'' வை முதலில் அறிந்து,,,
அவனையே எல்லா (ஹாலிலும்) ''நிலையிலும்'' நீ... சுஹூது செய்து,,,
அவன் அல்லாத எந்த ஒரு சிருஷ்டியையும் காணாமல் இருப்பதும்,,,
இந்த நிலையில்...
உனக்கு அந்த அல்லாஹ் வின்திரு முகக் காட்சியே...
பெரிதாய் இருத்தலும் வேண்டும்...!

அவன் அல்லாத அனைத்து சிருஷ்டியும் அற்பமாகவும்,,,
கணிக்கப்படல் வேண்டும்...!
மேலும் அவனே மிகப் பெரியவன் என்று ''ஈமான்'' கொண்டு...
அவனைக் கொண்டே நீ... அனைத்து வஸ்துவிலும்,,,
அவனைப் பயந்தவனாகவும் மாறி விடுதலும் ஆகும்....!!!
\\\இதை நீ இன்னும் விரிவாக அறிய நாடினால்,,,///
(இறை ஞானம் பெற்ற ஒரு ''சைஹுவை'' கண்டு தெளிவு கண்டு கொள் )

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...