Tuesday, 29 January 2013

அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள்


எழுதியவர்.பதிந்தவர்.உரை மௌலவி . இஸ்மாயில் ஸலஃபி

நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர் தோழர் என்பது அர்த்தமாகும். இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்பிற்கும். அந்தஸ்த்திற்கும் நேர்வழிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இஸ்லாத்தில் தோன்றிய எந்த வழிகெட்ட அமைப்பாக இருந்தாலும் அந்த அமைப்புக்கள் நபித்தோழர்களை உரிய முறையில் மதிக்காதவர்களாகவே இருந்தனர். ஷீயாக்கள் கவாரிஜ்கள் போன்ற வழிகெட்ட அமைப்புக்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள் முர்த்தத்துகள் என வாய் கூசாமல் கூறினர். முஃதஸிலாக்கள் முர்ஜியாக்கள் அஷ;அரியாக்கள் போன்ற வழிகெட்ட அமைப்புக்கள் அல் குர்ஆன் சுன்னாவுக்கு நபித் தோழர்கள் வழங்கிய கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காததினால் தான் வழிகெட்டுப் போயினர். இவர்கள் நபித்தோழர்களை விட நாமே குர்ஆன்இ சுன்னாவை சரியாக விளங்கியவர்கள் என்று கூறுவது போல் நடந்து கொண்டனர்.
நபித்தோழர்களை உரிய முறையில் மதிக்காத சில அமைப்பினர் நபித்தோழர்களுக்கும் உரிய முறையில் மார்க்கத்தை விளங்கத் தெரியவில்லை. அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். காபிர்களைப் போல் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர். அவர்களுக்கு அலக் என்பதற்கு உண்மையான விளக்கம் தெரியுமா? பிர்அவ்னின் உடம்பு இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருப்பது தெரியுமா? என்று கேள்வி எழுப்பி நபித்தோழர்களை விட தான் தான் குர்ஆன். ஹதீஸை சரியாகப் புரிந்து கொண்டவன் என்பதை நிலை நாட்ட முற்படுகின்றனர்.
இந்த சிந்தனை வழிகேட்டின் அடையாளமாகும். நபித்தோழர்களைக் குறைகாணும் எந்தத் தனி நபரும் அமைப்பும் வழிகேட்டின் ஏதாவதொரு படுகுழியில் வீழ்ந்ததாகவே இருக்க முடியும். நேர்வழி பெற்றவர்கள், அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என குர்ஆன் கூறுபவர்களைக் குறைகாண்பவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கும், நேர்வழிக்கும் அப்பாற்பட்டவர்களாகவே இருக்க முடியும்.
இந்த உண்மையை உணர்த்துமுகமாக அல்குர்ஆனின் பார்வையில் ஸஹாபாக்கள் என்ற இந்த ஆக்கம் வரையப்படுகின்றது.
பெரிய சாட்சி:

ஒருவரை நல்லவர் என ஒரு நல்லவர் சாட்சி கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். சாட்சி சொல்பவரைப் பொறுத்துத்தான் சாட்சிக்கு அந்தஸ்த்து வழங்கப்படும். சாட்சியிலே பெரிய சாட்சி அல்லாஹ்வின் சாட்சியாகும்.
'மிகப்பெரும் சாட்சியம் எது?' என்று (நபியே) நீர் கேட்டு, 'அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன்' என்று கூறுவீராக!' (6:19)
நபித்தோழர்கள் குறித்த உண்மையை உறுதி செய்ய இந்த வழிகெட்ட அமைப்புக்களுக்கும் எமக்குமிடையில் அல்லாஹ்வே பெரிய சாட்சியாளனாவான்! இதோ அல்லாஹ்வின் சாட்சியைப் பாருங்கள்.
01. 'நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அதிகமான விடயங்களில் கட்டுப்பட்டிருந்தால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள். எனினும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாக ஆக்கி, அதனை உங்களது உள்ளங்களில் அழகுபடுத்தினான். மேலும், நிராகரிப்பையும், பாவம் செய்வதையும், மாறு செய்வதையும் அவன் உங்களுக்கு வெறுப்புடையதாக ஆக்கினான். அவர்கள்தாம் நேர்வழி பெற்ற வர்கள்' (49:7)
நபித்தோழர்களுக்கு 'குப்ர்' வெறுப்புக் குரியதாக்கப்பட்டுள்ளது. மற்றும் பாவம் செய்வதும், மாறு செய்வதும் கூட வெறுப்புக்குள்ளாக்கப்பட்டு ஈமான் அவர்களுக்கு நேசத்திற்குரியதாக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு குப்ரையும் பிஸ்க்கையும்இ இஸ்யானையும் வெறுப்புக்குள்ளாக்கி யிருக்கும் போதுஇ இந்த வழிகெட்ட பிரிவினர் ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் காபிர்கள் என்றும் பாவிகள் என்றும் மாறு செய்தவர்கள் என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் சொல்வதை ஏற்பதா? இந்த வழிகெட்ட அமைப்பினர் சொல்வதை ஏற்பதா? சில அமைப்புக்கள் ஷPயாக்கள், கவாரிஜ்கள் போன்று அவர்களைக் காபிர்கள் என்று கூறாவிட்டாலும் பாவிகள்இ மாறு செய்தவர்கள் என்று கூறுகின்றனர். அல்லாஹ் சொல்வது உண்மையென்றால் இவர்கள் பொய்யர்கள். இவர்கள் சொல்வது தான் உண்மை என்றால் அல்லாஹ் பொய்யன் என்று கூற வேண்டும். யாரை உண்மையாளன் என்று கூறப்போகின்றீர்கள்? இவர்களை உண்மைப்படுத்தி அல்லாஹ்வைப் பொய்யன் என்று கூறப்போகின்றீர்களா?
02. 'மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக்கின்றீர்கள். மேலும்இ நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள்' (3:110)
அல்லாஹ் அவர்களைச் சிறந்த சமூகம் என்று கூறுகின்றான். அவர்கள் இருந்தது போல் இருக்கும் அனைவரும் இந்த சிறந்த சமூகத்தில் சேர்ந்து கொள்வர். ஆனால் சிறந்த சமூகம் என அல்லாஹ் நேரடியாக அவர்கள் குறித்துத்தான் சான்று கூறினான். அல்லாஹ் அவர்களைச் சிறந்த சமூகம் என்று கூறியிருக்க சிலர் அவர்களை 'கெட்ட சமூகம்' என சித்தரிக்க முற்படுகின்றனர். அவர்கள் அநியாயம் செய்தவர்கள்இ அக்கிரமம் புரிந்தவர்கள்இ சூழ்ச்சி செய்தவர்கள்இ பதவி மோகம் கொண்டவர்கள் எனக் கூறுகின்றனர்.
சிறந்த சமூகம் என்ற அல்லாஹ்வின் சாட்சியத்தை ஏற்கப்போகின்றீர்களா? அல்லது இவர்கள் கூறும் பொய்யை ஏற்கப் போகின்றீர்களா? அல்லாஹ் கூறுவது உண்மை என்றால் இவர்கள் கூறுவது பொய் தானே!
03. 'அவர்கள் உமக்குச் சதி செய்ய நாடினால் நிச்சயமாக அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியினைக் கொண்டும்இ நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மைப் பலப்படுத்தினான்' (8:62)
அல்லாஹுத் தஆலா தனது உதவியைக் கொண்டும். நபித்தோழர்களைக் கொண்டும் நபியைப் பலப்படுத்தியதாகக் கூறுகின்றான். நபித்தோழர்கள் காபிர்களாக. முர்த்ததுகளாக. பாவிகளாக. பதவி மோகம் கொண்டவர்களாக, ரௌடிகளாக இருந்தார்களென்றால் நபியைப் பலப்படுத்த அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பானா? அல்லது அல்லாஹுத் தஆலாவின் தேர்வு தவறானது என்று இவர்கள் கூறப்போகின்றனரா?
04. ' எவர்கள் நம்பிக்கை கொண்டு. ஹிஜ்ரத் செய்து. அல்லாஹ்வின் பாதையில் அறப் போரும் புரிந்தனரோ அவர்களும். எவர்கள் புகலிடம் அளித்து. உதவியும் செய்தார்களோ அவர்களுமே உண்மையான நம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்கு மன்னிப்பும். கண்ணியமான ஆகாரமும் உண்டு' (8:74)
முஹாஜிர்களையும். அன்ஸார்களையும் உண்மையான முஃமின்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். ஷPயாக்கள். கவாரிஜ்கள் போன்ற வழிகேடர்கள் அவர்களைக் காபிர்கள் என்கின்றனர். யார் சொல்வதை நம்புவது? வழிகேடர்கள் சொல்வதை நம்பி அல்லாஹ் கூறுவதைப் பொய் என்று கூறலாமா? மற்றும் சில வழிகேடர்கள் உண்மையான முஃமிக்களுக்குரிய பண்பு அற்றவர்களாக அன்சாரிகளையும். முஹாஜிர் களையும் சித்தரிக்க முற்படுகின்றனர். அல்லாஹ் சொல்வதை நம்புபவர்கள் இந்த தடம் புரண்டவர்களின் உளறல்களைக் கண்ணியப்படுத்த முடியுமா?
அல் குர்ஆனில் சுமார் தொண்ணூறு இடங்களில் நபித்தோழர்களின் ஈமான் உறுதி செய்யப் படுகின்றது.
பல இடங்களில் அல்லாஹ் அவர்களை நம்பிக்கையாளர்களே என அழைக்கின்றான். மற்றும் பல இடங்களில் அவர்களை நம்பிக்கையாளர்கள் என்று கூறுகின்றான். (3:121, 124, 164,}

அல்லாஹ்வால் நம்பிக்கையாளர்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டவர்களை முஃமின்கள் இல்லை என்றோ முஃமின்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ கூற முடியுமா?
அல்லாஹ் அவர்களை முஃமின்கள் என்று கூறுகின்றான் என்றால் அவர்கள் நம்பிக்கை கொண்ட முறை சரியென்பதால் தானே அவ்வாறு கூறுகின்றான். அவர்கள் நம்பிக்கை கொண்டதை தவறு என்று இன்று நேற்று வந்த வழிகேடர்கள் கூறுவதை எப்படி நாம் சரிகாண முடியும்?
05. 'இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும்இ அவனது வானவர் களையும். அவனது வேதங்களையும். அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். 'அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம். கட்டுப்பட்டோம். எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது' என்றும் கூறுகின்றனர்' (2: 285)
இந்த வசனத்தில் நபித்தோழர்கள் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை நம்பினார்கள் என்றும் அவர்கள் அல்லாஹ்வையும். மலக்குகளையும். அவனது வேதங்களையும். தூதர்களையும் நம்பினார்கள் என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். அல்லாஹ்வையும். மலக்குகளையும். வேதங்களையும். தூதர்களையும் எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான முன் உதாரணத்தை நாம் நபித்தோழர்களிடம் பெறுவதை இந்த வசனம் சரிகாண்கின்றது. இன்று வந்த சிலர் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியது தவறு மலக்குகள் பற்றி நம்பியது தவறு.

வேதம் பற்றி நம்பியது தவறு, தூதர்கள் பற்றி நம்பியது தவறு, அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதை அவர்கள் நம்பியது தவறு நான் தான் இதையெல்லாம் சரியாக விளங்கி நம்புகின்றேன் என்று கூறினால் அல்லாஹ்வின் சாட்சியத்தை ஏற்பதா? இவர்களின் உளறலை ஏற்பதா? நபித்தோழர்கள் செவிசாய்த்தோம், கட்டுப்பட்டோம் என்று கூறினார்கள் என அல்லாஹ் கூறுவதன் மூலம் நபித்தோழர்கள் ஏவப்பட்டதைப் புரிந்து கொண்டு செயல்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் உறுதி செய்கின்றான். இந்த அடிப்படையில் நபி மொழிகளுக்கான நடைமுறை விளக்கமாக நபித்தோழர்களின் செயல்கள் இருப்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.
நபித்தோழர்கள் யார்? அவர்களுக்கும் இந்த மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கும் இவர்கள் நபித்தோழர்கள் சொல்வதை எடுக்கக்கூடாது நான் சொல்வதைத் தான் எடுக்க வேண்டும் என்று கூறினால் அதை உண்மைப்படுத்த முடியுமா?
(இந்த வசனத்தின் இறுதிப்பகுதி நபித்தோழர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் தவறுகள் நடக்கும் என்பதையும் மறுக்கவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்)
06. '(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் எவற்றைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ. அதே போன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால்இ நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவர். அவர்கள் புறக்கணித்தால். அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே. அவர்களிலிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவனும். நன்கறிந்தவனுமாவான்' (2:137)
நபித்தோழர்கள் ஈமான் கொண்டது போல் ஈமான் கொள்வது ஹிதாயத் – நேர்வழிக்கான வழி என இந்த வசனம் கூறுகின்றது. இதன் மூலம் எப்படி ஈமான் கொள்வது என்பதற்கான வழிமுறையை நபித்தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதை இந்த வசனம் சரிகாண்கின்றது. ஆனால் வழிகேடர்கள் நபித்தோழர்களுக்கு சரியாக ஈமான் கொள்ளத் தெரியாது என்று கூறினால் அதை நாம் உண்மைப்படுத்த முடியுமா?
07. 'எவர்கள் நம்பிக்கை கொண்டு. ஹிஜ்ரத் செய்து. அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்களாலும். தங்களது உயிர்களாலும். அறப்போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்தஸ்துக்குரியவர்கள். மேலும். அவர்கள் தான் வெற்றியாளர்களாவர்' (9:20)
இந்த வசனம் நபித்தோழர்களை வெற்றியாளர்கள் என்று கூறுகின்றது. இந்த வழிகெட்ட பிரிவினர் அவர்களைத் தோல்வியாளர் களாகக் காட்ட முற்படுகின்றனர். அல்லாஹ் சொல்வதை நம்புவதா? இவர்கள் சொல்வதை நம்புவதா?
08. 'தமது இல்லங்களையும். தமது செல்வங்களையும் விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கும் (பங்குண்டு.) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் நாடி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்கின்றனர். அவர்கள்தாம் உண்மையாளர்கள்' (59:8)
அவர்கள் உண்மையாளர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். வழிகேடர்கள் அவர்களைப் பொய்யர்களாகச் சித்தரிக்க முற்படுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது?
09. 'நிராகரித்தோர். தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தபோது. அல்லாஹ் தனது தூதரின் மீதும். நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கி வைத்தான். மேலும் பயபக்தியின் வார்த்தையை அவர்களுக்குக் கட்டாயப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும் அதற்குரியவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்' (48:26)
நபித்தோழர்கள் இறையச்சத்திற்குரியவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தக்வா அற்றவர்கள் என சித்தரிக்க வழிகேடர்கள் முனைகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது. அல்லாஹ் கூறுவது உண்மையானால் இவர்கள் பொய்யர்கள் தானே!
10. 'எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்களாலும் தங்களது உயிர்களாலும் அறப்போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்தஸ்துக்குரியவர்கள். மேலும் அவர்கள் தான் வெற்றியாளர்களாவர்.'
'அவர்களுக்கு அவர்களது இரட்சகன் தன்னிடமிருந்துள்ள அருளையும் பொருத்தத்தையும் சுவனச் சோலைகளையும் கொண்டு நன்மாராயம் கூறுகின்றான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு' (9:20-21)
அவர்கள் நற்செய்திக்குரியவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் துர்ச் செய்திக்குரியவர்களாக வழிகேடர்கள் கூறுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது.
11. 'மேலும் முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும்இ அவர்களை நல்ல முறையில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.' (9:100)
முஹாஜிர்களையும் அன்சார்களையும் நல்ல முறையில் பின்பற்றுகின்றவர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுவார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இல்லை அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்ள மாட்டான் என இவர்கள் கூறுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்தப் போகின்றீர்கள்? அல்லாஹ் கூறுவது உண்மை என்றால் இவர்கள் கூறுவது பொய் தானே?
நமது பொறுப்பு:

அவர்கள் தவறு செய்தாலும் மன்னிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் குறித்து மன்னிப்பின் வாக்கு முந்திவிட்டது என குர்ஆன் கூறுகின்றது.(பார்க்க: 9:117-118, 8:67-68, 3:152)
எனவே அவர்கள் இப்படிச் செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என விமர்சிப்பது நமது பொறுப்பு அல்ல என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹுத் தஆலா முஹாஜிர்கள். அன்சாரிகள் பற்றிக் கூறிவிட்டு.
'இவர்களுக்குப் பின் வருவோர் 'எங்கள் இரட்சகனே! எங்களையும் நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும்இ நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்' எனக் கூறுவார்கள்' (59:10)
அவர்களுக்காக நாம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். ஈமானில் முந்தி விட்டவர்கள் பற்றி குரோதத்தை ஏற்படுத்தாதே என்று பிரார்த்திக்க வேண்டும் என்கின்றான். அவர்கள் தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் தான் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள் என்று கூறுகின்றான். இதை விட்டு விட்டு அவர்களை விமர்சிப்பவர்களும். அவர்கள் ஈமானில். இபாதத்தில் மார்க்கத்தை விளங்குவதில் நம்மை விடக் குறைந்தவர்கள். அவர்கள் இழிவான குணங்களைக் கொண்டவர்கள் என விமர்சிப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் பற்றிய குறைவான எண்ணத்தையும் குரோத குணத்தையும் உருவாக்க முனைபவர்கள் ஷைத்தானின் வழியில் செல்பவர்களாகத் தானே இருப்பார்கள்!
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு அன்பாளராக அருளாளராக இருந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. (9:61 5:43) இவர்கள் நபித் தோழர்களுக்கு விரோதிகளாகவும்இ அவர்களை விமர்சிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நபிவழி நடப்பவர்களா? நபிவழியைக் கெடுப்பவர்களா?
நபித்தோழர்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் படி நபியை அல்லாஹ் ஏவுகின்றான். (47:19) ஆனால் இவர்கள் அவர்கள் எங்கேயாவது தப்புத் தவறு செய்துள்ளார்களா? எனத் தேடித் திரிந்து அதைப் பகிரங்கப்படுத்துவதில் அலாதிப் பிரியம் கொள்கின்றனர். இவர்கள் நபிவழி நடப்பவர்களா?
நபிவழி நடப்போம்:
'அவர்களில் பல தரப்பினருக்கு நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது இரு கண்களையும் நீர் செலுத்தாதீர். அவர்கள் குறித்து நீர் கவலைப்படவும் வேண்டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!' (15:88)
'நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின் பற்றுவோருக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!' (26:215)
இந்த இரு வசனங்களிலும் நபித்தோழர் களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்துவீராக என அல்லாஹ் நபியை ஏவுகின்றான். இதற்கு மாற்றமாக அவர்கள் விடயத்தில் ஆணவமாகவும் அவர்களை அவமதிக்கும் விதமாகவும் பேசும் எவரும் நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியாது என்பதை உறுதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் விடயத்தில் பணிவுடன் நடப்பதே நமக்கு ஏவப்பட்ட வழிமுறையாகும். அவர்கள் மீது பழி சுமத்துவோரும் அவர்களைப் பழித்தும் குறைத்தும் பேசுவோரும் பாவிகளே! இத்தகைய இழி குணத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோமாக!

உமர் (ரலி)-ன் மரணமும்? படிப்பினையும்

உமர் (ரலி) அவர்களது வாழ்க்கை எந்தளவு இறையச்சம் மிகுந்ததாக இருந்தது என்பது பற்றி கீழ்க்கண்ட சம்பவம் நமக்கு மிகுந்த படிப்பினையாக உள்ளது. ஸூபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய சுற்றுப்புறங்களின் மீதும், அவற்றின் தாக்குதல்கள் என்னைப் பாதித்து விடாத அளவுக்கு, நான் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பேன், அப்படி இருக்கக் கூடிய நிலையில், உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அளித்த துன்பத்தைப் போல வேறு எந்தத் துன்பமும் எங்களைப் பாதித்ததில்லை.

உமர் (ரலி) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இஷh ஆகிய நேரத் தொழுகைகளை முன்னின்று நடத்தியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அளித்துக் கொண்டிருந்த நிலையில், அன்று அதிகாலை பஜ்ர் நேரம், ஒரு மனிதர் வித்தியாசமான முறையில் அந்த பஜ்ர் நேரத் தொழுகைக்கான தக்பீர் கூறினார். (ஆனால் அவர் உமர் இல்லை என்பதை அவரது குரல் மூலமாக உணர்ந்து கொண்டோம்.). எங்களுக்குத் தொழுகை வைத்தவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்பதை அறிந்து கொண்டோம். பின் மக்கள் தொழுது முடித்ததும், மூஃமின்களின் தலைவர் உமர்(ரலி) அவர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

மக்கள் தொழுகையை முடித்திருந்த நிலையில், உமர் (ரலி) அவர்கள் இன்னும் தொழுகையை நிறைவேற்றியிருக்காத நிலையில், இரத்தம் அவர்களது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நிலையில், ஓ! மூமின்களின் தலைவர் அவர்களே! தொழுகை! தொழுகை! (நீங்கள் இன்னும் தொழவில்லையே!) என்று மக்கள் கூறவும், ஆம்! இறைவன் மீது சத்தியமாக! தொழுகையை மறந்தவனுக்கு இஸ்லாத்தில் எந்தவிதப் பங்கும் கிடையாது என்று கூறி விட்டு, தொழுகைக்காக எழுந்திருக்க முயற்சி செய்தார்கள், ஆனால் இரத்தம் அதிகமாக வழிந்து கொண்டிருந்தது. 

அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, நீங்கள் அறிந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ததா? என்று கேட்டார்கள். அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் அறிந்திருந்தாத நிலையில் தான் நடந்தது, இறைவன் மீது சத்தியமாக! இறைவனுடைய படைப்பினங்களில் உங்களைத் தாக்கியவர் யார் எனபதை நாங்கள் அறிய மாட்டோம் என்று பதில் உரைத்தார்கள். 

உங்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தாயாராக இருக்கின்றோம். உங்களது இரத்தம் எங்களது இரத்தமாகும். (அதாவது உங்களைத் தாக்கியவர், உங்களை மட்டும் தாக்கவில்லை எங்களையும் தாக்கியுள்ளார். உங்கள் உடம்பிலிருந்த வழிந்து கொண்டிருப்பது உங்களது இரத்தம் மட்டுமல்ல, எங்களது இரத்தமும் இணைந்தே வழிகின்றது என்ற பொருள்படி அலி (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்). 

பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து, வெளியில் சென்று மக்களுக்கு (நடந்திருப்பவைகள் பற்றிய) உண்மையைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். வெளியில் சென்று விட்டுத் திரும்பிய அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்: அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறி, சொர்க்கத்திற்கான நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நற்செய்தியை உமர் (ரலி) அவர்ளுக்கு அறிவித்தார்கள். இறைவன் மீது சத்தியமாக! ஆணோ அல்லது பெண்ணுக்குரியதேர்! அசைகின்ற ஒவ்வொரு கண்களும் உங்களுக்காக கண்ணீரைச் சொறிந்து அழுது கொண்டிருக்கின்றன. கண்ணீரைச் சிந்தாத, அழாத கண்களை என்னால் காண முடியவில்லை. 

ஒவ்வொருவரும் உங்களுக்காக தங்களது தாய்மார்களையும், தந்தைமார்களையும் அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். நெருப்பு வணங்கியான முகீரா பின் சுப்பாவினுடைய அடிமை தான் உங்களைத் தாக்கியது என்பதை அறிந்து கொண்டோம், அவனும் இன்னும் பன்னிரண்டு நபர்களும் இப்பொழுது இரத்தம் வழிந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், அவர்களது நிலை  எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இறைவன் திர்மானித்துக் கொள்வான் என்று அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விட்டு, ஓ! அமீருல் முஃமினீன் அவர்களே! சொர்க்கம் உங்களுக்கு! என்று நாங்கள் வாழ்த்துகின்றோம் என்று கூறியவுடன், இத்தகைய வார்த்தைகள் மூலம் யார் உங்களை வழிகெடுத்தது ஓ! இப்னு அப்பாஸ்! அவர்களே! இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள், ஏன்? நான் அவ்வாறு கூறக் கூடாது, இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது எங்களுக்கு பலத்தைத் தந்தது, உங்களது ஹிஜ்ரத் வெற்றியைத் தந்தது, உங்களது ஆட்சி நீதி வழுவாத ஆட்சியாக இருந்தது, ஆனால் நீங்கள் அநீதியான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றீர்கள். 

இப்னு அப்பாஸ் அவர்களே! சற்று முன் என்னிடம் கூறியவைகளை, நாளை மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் எனக்காக நீங்கள் சாட்சி சொல்வீர்களா?! அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக! ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த வார்த்தைகளை நாளை மறுமை நாளிலே இறைவன் முன்னிலையில் உங்களுக்காக நாங்கள் சாட்சி சொல்வோம் என்று கூறினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அப்துல்லாவைப் பார்த்து, என்னுடைய மகனே! என்னுடைய நெற்றியை இந்த நிலத்தில் வைப்பீராக! என்று கூறினார்கள். 

இந்த சம்பவம் நடந்து முடிந்து, பின்பு ஒரு நாள் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். என்னுடைய தந்தையார் தாக்கப்பட்டுக் கிடந்த அந்த வேளையில், முதலில் அவர்கள் அவர்களுடைய நெற்றியைத் தரையில் வைக்குமாறு என்னை நோக்கிக் கூறினார்கள். அந்த பரபரப்பான அந்த நிலமையில், என் தந்தையார் என்னை நோக்கிக் கூறியவற்றை நான் கவனிக்கவில்லை. 

எனவே மீண்டும் அவர்கள் என்னை நோக்கி, அவர்களது நெற்றியைப் நிலத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்கள். அப்பொழுதும் நான் அதைச் செய்யவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக அவர்கள் என்னை நோக்கி, உன்னுடைய தாயார் உன்னை இழப்பாளாக! என்னுடைய நெற்றியை நிலத்தில் வை! என்று எனக்கு உத்தரவிடவும், சுயநினைவற்று நான் நின்றிருந்ததை விட்டும் உணர்வு பெற்றவனாக, என்னுடைய தந்தையின் நெற்றியை நிலத்தில் வைத்தேன். இறைவன் என்னை மன்னிக்கா விட்டால், உமருக்குக் கைசேதமே! உமருடைய தாயுக்கும் கைசேதமே! என்று கூறியவர்களாக, அவர்களது கண்களை மண் மறைக்கும் அளவுக்கு உமர் (ரலி) அழுதார்கள். 

அடுத்து அமீருல் முஃமினீன் என்று நம்மால் மிகவும் கண்ணியமாக அழைக்கப்படும் உமர் (ரலி) அவர்களது சம்பவம் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு படிப்பினையாகும். உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டு மரணதருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கச் செல்கின்றார்கள். 

உமர் (ரலி) அவர்கள் இருந்த நிலையைப் பார்த்த அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், நம்பிக்கையாளர்களின் தலைவரே! யா அமீருல் முஃமின் அவர்களே!! நீங்கள் நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! மக்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த பொழுது நீங்கள் நாயகம் ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்களது திருக்கரங்களில் நம்பிக்கை தெரிவித்து இஸ்லாத்தில் நுழைந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்களை அந்த நிரகாரிப்பாளர்கள் தாக்கிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று போர் புரிந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுடன் நல்லமுறையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தங்களது மரணத்தைச் சந்தித்துக் கொண்டார்கள், நீங்கள் கலீபாவாக நியமிக்கபட்ட பொழுது எந்த மனிதரும் உங்களுக்கெதிராக எழுந்ததில்லை. 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறியவற்றைத் திருப்பிக் கூறுங்கள் என்று கூறி விட்டு, உங்களை யார் இந்த தப்பெண்ணம் கொள்ளச் செய்தானோ அவனே வழிகேடன் என்று கூறி விட்டு, இந்த பூமி முழுவதும் தங்கமும் வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுக்கத்து விடுவேன் என்று பதில் கூறினார்களாம்.

பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.


எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது” என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.
புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).

1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.
புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப்பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

Monday, 28 January 2013

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:


ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

இந்த ஹதீஸின் படி நபியவர்களை குறைகூறி அவர்கள் சொல்லாத வைகலை சொல்லும் வஹாபிகள் அன்னவர்களை புகழக்கூடாது என்று அவர்கள் சொல்லும் போதெல்லாம் நாம் எமது நபியை புகழ்பாடுவதை இன்னும் இன்னும் அதிகரித்துக்கொல்வோம்....

அந்த வாஹையில் எமது ஊரில் மாஷா அலாஹ் ஒவ்வொரு முறையும் நபி புகழ் பாடுவதும் அந்நாளை சிறப்பிப்பதிலும் நாளுக்கு நாள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது வாஹாபிகளாலும் மறுக்க முடியாத ஒரு உண்மை ... அல்ஹம்து லில்லாஹ்...

எல்லோரும் போற்றும் இறை தூதரே! மவ்லித்:

அல்லாஹ்வின் தூதே!அருள் தீபமே!
எங்கள் யாநபீ-எங்கள் யாஹபீப்!
எல்லோரும் போற்றும் இறை தூதரே!
எங்கள் யாநபீ!எங்கள் யாஹபீப்!
********
அந்நாளிலே மாந்தர் திசை மாறினார்,
எந்நாளுமே தீய வழிதன்னிலே
பாவங்களில் மூழ்கி தடுமாறினார்,
ஏனென்று கேட்க்க எவர் நாடினார்.
அருளாக வந்தீரே அண்ணல் நபி!
அண்ணல் யாநபி!அன்பே யாஹபீப்!
**********
தாயிஃப் நகரத்து வீதியிலே,
தடியர்கள் உம்மேனியைத்தாக்கினர்,
செங்குருதி உங்கள் செம்மேனியில்
சிந்திட நீர் மயங்கி வீழ்ந்தீர்களே!
கண்கள் கலங்குது கருணை நபி!
கண்கள் தேடுதே எங்கள் யாஹபீப்!
***********
ஷுஃபே அபீதாலிபில் வாடினீர்!
சருகுகளைக் கொண்டு பசியாரினீர்!
பாலின்றி பதறிய குழந்தைகளின்
நிலையினைப் பார்த்தே நீர் கண்ணீர் சொரிந்தீர்
நினைத்தாலே உள்ளம் அழுகின்றது
உண்மை யாநபீ!எங்கள் யாஹபீப்!
**********
சுடு பாலை மணல் மீது நான் ஓடவா?
சுந்தர பூங்காவில் நான் தேடவா?
புதர் நிறைந்த மலை மீது நான் பார்க்கவா?
பாய்கின்ற கண்ணீரை அணை போடவா?
அன்பாலே உள்ளம் அலை வீசுதே!
அன்பே யாநபி!அண்ணல் யாஹபீப்!

Friday, 25 January 2013

தினம் ஒரு ஹதீஸ்,

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

தினம் ஒரு குர்ஆன் வசனம்

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

தினம் ஒரு குர்ஆன் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

தினம் ஒரு ஹதீஸ்,

1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐய
த்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.
2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.
3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:
சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)

அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)

82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)

இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.

அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.

மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.

காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபிர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.

இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.

நரகமும் அதன் வேதனையும்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)

அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)

நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)

சுவர்க்கம்

சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(32:17)

சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத் தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான்.(58:11)

சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும் ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.(37:45-47)

சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்”.(புகாரி)

சுவர்க்கவாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள் மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த பங்கை உடையவன்.

Thursday, 24 January 2013

அக்குரனையில் PJ மாட்டிக்கொண்டார் 2

PJ உங்கள் தவ்ஹீத் இதுதானா?....


சண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ

Who is P.J ? - யார் இந்த P.J ?

P.J is Munafiq - "Must See"

PJயின் பொய்களை உடைத்தெறியும் ஜமாலி

அக்குரனையில் PJ மாட்டிக்கொண்டார் 1

Tuesday, 22 January 2013

தினம் ஒரு ஹதீஸ்,

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் திருப்பெயரால்(துவங்குகிறேன்) மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (Al-Quran:4-2

இந்திய தேசிய லீக் கட்சியின் எச்சரிக்கை..!!

கமல் கூத்தாடிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் எச்சரிக்கை..!!

நான் நாத்திகவாதி என்று பூனல் அறுத்து எரிந்தவன் நீ எதற்கு ....இஸ்லாமியர்களை கொச்சைபடுத்தவா ? வந்தேரி கமலே..?

துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டுனான்...விஜய்...

விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களின் பிறப்பே தீவிரவாதம் என்று காட்டுகிறான் இந்த கமல்...

குஜராத்தில் 3000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று குவித்தானே நர மாமிச நரி மோடியை வைத்துப்படம் எடுக்க உங்களுக்கு திறானியிருக்க தில் இருக்க..

மலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான இந்து தீவிரவாதியை வைத்து படம் எடுக்க உங்களுக்கு திராணி இருக்க ?

பாபர் மசூதியை இடித்த அத்வானி முரளி மானோகர் ஜோசி உமா பாரதியை வைத்துப்படம் எடுக்கு உங்களுக்கு ஆண்மை இருக்க..?

எச்சரிக்கை !! எச்சரிக்கை!! வந்தேரி கமலே எச்சரிக்கை...!!
தடை செய் !! தடை செய் ..!! விஸ்வரூபத்தை தடை செய்..!!

காயல்பட்டினத்தில்பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவு இயக்கக் கூட்டம்


காயல்பட்டினத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறை நல்லுறவுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஏ,அப்பாஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.கண்ணன், துணைச் செயலர் ஏ.பஷீர் அஹமது, மாவட்ட அமைப்பாளர் யு.கே.பிலால் ஆசாத்,மாவட்டச் செயலர் ஏ.பி.ஆரீப் மற்றும் நகரத் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த காவல்துறையினருடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடன்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளாளர் ஏ.பி.முகமது மைதீன் வரவேற்றார்.  நகர துணைச் செயலர் பி.ஆத்திமுத்து நன்றி கூறினார்.

Monday, 21 January 2013

தினம் ஒரு ஹதீஸ்,

புறம் பேசித் திரிபவருக்குக் கேடு தான்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். 
(104:01).

கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்கிறார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறி விட்டு, ஒரு பசுமையான பேரித்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அந்த இரு மட்டைத்துண்டுகளும் காயாமல் இருக்கும் பொழுதெல்லாம், அந்த இருவரின் வேதனை குறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

நாவிற்கு நரம்பில்லை என்பதற்காக.., நாம் எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பேசலாம் என்று எண்ணுபவர்கள் பலர். அல்லாஹ் கூறுகிறான் :

பொய்யான சொல்லை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன்
(22:30)

தினம் ஒரு ஹதீஸ்,

"அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் 5012

தினம் ஒரு ஹதீஸ்

'நான் மிஃராஜிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சுகளையும் கீறி பிளந்து கொண்டிருந்தார்கள். "இவர்கள் யார்?" என்று நான் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர், "இவர்கள் தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 

நூல்: அபூதாவூத் 4235
பிஜே முனாபிக் ஆகும் தருணம் 

ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை


பழுதடைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும்  இச்சாலை வாகைக்குளம் பகுதி வரை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
பத்மநாபமங்கலம் மற்றும் பேட்மாநகரம் பகுதியில் செயல்படும் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் ஆலையிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன.
மேலும், மீனாட்சிப்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் தொழில்சாலைகள் உள்ளதால் கல்லூரிப் பேருந்துகள் மற்றும் பணியாளர் வாகனங்களும் இச்சாலையில் வந்து செல்கின்றன.
இடதுபுறமாகச் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பினும், சாலையில் உள்ள மேடு, பள்ளங்களைத் தவிர்ப்பதற்காக வாகனங்கள் திடீரென வலதுபக்கமாகத்  திரும்புவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இதனால் வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே ஸ்ரீவைகுண்டம்- தூத்துக்குடி சாலையில் வாகைக்குளம் பகுதி வரை உள்ள சாலையை சீரமைத்து, தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கூடுதலாக அரசு பஸ்களை  இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, 17 January 2013

பேட்மா ஏகத்துவ இளைஞர் பேரவை (PAIP)

சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வருகை தரும்   ஜாமதர்கள்  தாய்மார்களையும்  நண்பர்களையும்  வருக வருக என அன்புடன் வரவர்கிறோம் 


இவண் 
 பேட்மா ஏகத்துவ இளைஞர் பேரவை (PAIP)






பீஜே வணங்கி என்று சொல்லலாமா


நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள்,
ஹதிஸை பற்றி எந்த ஞானமும் இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில்
இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் நீங்கள்
அறியாமல் மூடர்களாக உள்ளீர்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை
செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!
செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம்
மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப்
பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது!
அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை
சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை
உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக
அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம்
எனப் பத்வா வழங்கியுள்ளார., அதுவும் சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு
வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக
கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த
வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்


ஆனால் பீஜே அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ்
உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....





ஆனால் அவரின் பத்வாவுக்கு எதிராக அவரே தற்போது பன்றியின் தோல் ஹலால் எனக் கூறும்
பத்வாவை அவரது இணையத் தளத்தில் காணுங்கள்:
http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/panri_thol_viyabaram/

பன்றியின் இரத்தம் ஹலால் எனும் பத்வா பார்க்க:
http://www.youtube.com/watch?v=mOkEC5vlNQs

தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த
ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால்
உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை
கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை
அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,
இமாம் புஹாரி(ரஹ்))

மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள ஹதிஸின் பகுதியை மட்டும்
மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள்,
அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம்
ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள்
என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு
செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது
தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை
நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி)
அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு
செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான்
வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம்
முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),
இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின்
பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால்
ஹரமான பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது
பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை
எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது.

Monday, 14 January 2013

Sunday, 13 January 2013

நத்வத்துன் நூரியவின் 12வது ஆண்டு விழா





நூருல் ஈமான் இஸ்லாமிய  மகளிர் கல்லூரியில் உத்தம நபியீன்  உதய நாளை முன்னிட்டு நத்வத்துன் நூரியவின்      12வது  ஆண்டு விழா 
14.01.2013 திங்கள்கிழமை மாலை முதல் 25.01.2013 வெள்ளிகிழமை மாலை வரை 12 நாட்கள் நம் நூருல் ஈமான் இஸ்லாமிய  மகளிர் கல்லூரி பாட ஹாலில் வைத்து  நத்வத்துன் நூரியவின்      12வது  ஆண்டு விழா சிறப்பாக நடைபெறஉள்ளது .இந்நிகழ்ச்சியல்  அனைவரும் கலந்து கொண்டு அண்ணல் நபி( ஸல் ) அவர்களையும் அறிந்து அவர்களின் வழி
 நடந்திடவும் அனைவரயும் அன்புடன் அழைக்கிறோம் .

Thursday, 10 January 2013

Islam Most Growing Religin கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்

Islam World Most Growing Religion
உலகை கவந்துள்ள இஸ்லாம்.
கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொள்ளும் மேற்கத்திய மக்கள்

தொழுகை என்பது அவசியம்...

           தொழுகை என்பது அவசியம் 
               பேசுபவர் மௌலவி அப்துல் பாஸித்

பேட்மா நகரம் சுன்னத்வல் ஜமாத்.: ஹதிஸ்

பேட்மா நகரம் சுன்னத்வல் ஜமாத்.: ஹதிஸ்: நபி ஸல் அவர்களின்  கடைசி  நாட்கள்

Wednesday, 9 January 2013

இஸ்லாமியர்களே சீண்டதா....


ஓர் இளம் வயதுப் பெண்ணின் அழகிய இறுதி முடிவைப் பாருங்கள்!

ஓர் இளம் வயதுப் பெண்ணின் அழகிய இறுதி முடிவைப் பாருங்கள்!

ஸப்க் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிஜ்ரி 1433-8-26 ல் வெளியான செய்தி.

ரியாத் பகுதியில் நடந்த நெகிழவூட்டும் சமப்வம்!:

இருபது வயதே நிறைந்த இளம் பெண் ஸுஜுதில் இருக்கும் போது இவ்வுலகத்தை விட்டு பிரிந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாகும். அவரது கணவர் “நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் ஆணயத்தில்” பணிபுரிகின்றார் அவருக்கு தனது மனைவியின் இத்திடீர் பிரிவு கடும் திடுக்கத்தை ஏற்படுத்தியது.

அவரது மனைவியை பொறுத்த வரையில் தன்னை நன்மையான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்கின்ற, இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்ற, அல்குர்ஆனை மனனமிட்டு வரக்கூடிய ஒரு சிறந்த பெண்ணாவாள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் தனது கணவருடன், தான் கற்கும் பல்கலைகழகத்திற்குச் செல்வது அவளது வழமை. அன்றும் தனது கணவருடன் செல்வதற்கு ஆயத்தமாகி லுஹாத் தொழுகையை தொழுது வருவதாக கணவரிடம் கூறிவிட்டு தொழுகைக்குச் செல்கிறாள். ஆனால் அது அவள் தொழும் இறுதித் தொழுகை என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கணவர் வேறு அலுவல்களில் ஈடுபட்டுவிடுகின்றார், நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பாததை பார்த்து மனைவி தொழுத இடத்திற்கு வருகின்றார். மனைவியின் ரூஹ் ஸுஜுதிலே பிரிந்திருப்பதைக் கண்டு திடுக்குறுகின்றார்.

ஆம் அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வின் வார்த்தைகள் உண்மையானதாகும், “மேலும் எந்த ஒரு ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கேற்ப அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை” (ஆல இம்ரான் 3: 145).

தொழுகையில் ஸுஜுத் என்பது அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கும் நிலையாகும், இந்நிலையில் உயிர் கயிப்பற்றப்படுவதென்பது எவ்வளவு உயரிய பாக்கியமாகும். நாம் நமது இறுதி முடிவு சிறந்ததாக அமையவே அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக் வேண்டும்.

சினிமா நடிகர்கள், நடிகைகள் மீது மோகங்கொண்டு அவர்களுக்குப் பின்னால் அழைந்து திரியும் நமது இளம் சமூகமே! இந்நிகழ்வில் நமது வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை படிப்பினைகள் என்பதை சிந்திப்போமாக!.

அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள்: “ஒரு அடியான் எந்நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் தான் நாளை மறுமையில் எழுப்பபடுவான்”. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம்).

நமத இறுதி முடிவும் சிறந்ததாக அமைவதற்கு வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

இச்சம்பவத்தின் அரபு மூலத்தை படிக்க இந்த லிங்கை சொடுக்கவும்: http://sabq.org/IEkfde

தமிழ் வடிவம்: அஸ்ஹர் ஸீலானி

இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ்

காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி

ஹைதராபாத்: மதக் கலவரத்துக்கு இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார். இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...